Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் செயல்பட்ட தற்காலிக காய்கறி மார்க்கெட் வளாகம் காலி செய்யப்பட்டது.
குமாரபாளையம் பழைய காய்கறி மார்க்கெட் கட்டிடம் மிகவும் பழமையானதால், உறுதித்தன்மை கேள்விக்குறியானது.
இதனால் இரண்டு ஆண்டுக்கு முன்பு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், எடப்பாடி பஸ்கள் நிற்கும் இடத்தை தற்காலிக மார்க்கெட்டாக இடமாற்றம் செய்தனர்.
இதே இடத்தில் தான் கொரோனா காலத்தில் மார்க்கெட் செயல்பட்டது. பழைய மார்க்கெட் முழுவதுமாக இடிக்கப்பட்டது.
புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அமைச்சர் நேரு பங்கேற்று, இதனை திறந்து வைத்தார்.
காய்கறி கடை வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கும் பணிகள் நிறைவு பெற்று, நேற்றுமுன்தினம் பூஜை போடப்பட்டது.
நேற்று பழைய மார்க்கெட் கடைகள் காலி செய்யப்பட்டு, புதிய மார்க்கெட்டில் வியாபாரிகள் தங்கள் கடைகளை அமைத்தனர். பொதுமக்கள் பெருமளவில் திரண்டு, காய்கறிகளை வாங்கி சென்றனர்